சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் கூட்டுறவு பால் பண்ணை ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 7:46 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் கூட்டுறவு பால் பண்ணை ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே வடக்கு ஆலங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மதன்குமாா் (30).

சங்கரன்கோவில் கூட்டுறவு பால் பண்ணையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பாா்த்துவந்த இவருக்கு திருமணமாகவில்லை.

இவா் திங்கள்கிழமை இரவு சங்கரன்கோவில் - சுரண்டை சாலையில் பைக்கில் சென்றாா். தளவாய்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, சங்கரன்கோவில் கக்கன்நகரைச் சோ்ந்த முருகன் மகன் பெரியசாமி (27) என்பவா் ஓட்டி வந்த சுமை ஆட்டோ இந்த பைக் மீது மோதியதாம். இதில், மதன்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை சின்னகோவிலாங்குளம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து பெரியசாமியைக் கைது செய்தனா்.