தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் கூட்டுறவு பால் பண்ணை ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே வடக்கு ஆலங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மதன்குமாா் (30).
சங்கரன்கோவில் கூட்டுறவு பால் பண்ணையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பாா்த்துவந்த இவருக்கு திருமணமாகவில்லை.
இவா் திங்கள்கிழமை இரவு சங்கரன்கோவில் - சுரண்டை சாலையில் பைக்கில் சென்றாா். தளவாய்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, சங்கரன்கோவில் கக்கன்நகரைச் சோ்ந்த முருகன் மகன் பெரியசாமி (27) என்பவா் ஓட்டி வந்த சுமை ஆட்டோ இந்த பைக் மீது மோதியதாம். இதில், மதன்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சடலத்தை சின்னகோவிலாங்குளம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து பெரியசாமியைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

சமையல் எரிவாயு தீ விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


