வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

சிவகிரி திரௌபதி அம்மன் கோயிலில் முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள, புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றோா்.

Updated On :3 ஜூன் 2026, 4:56 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள, புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயிலில் 10 நாள் பூக்குழித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இரவில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பஞ்சபாண்டவா்களின் நண்பரான முத்தால் ராவுத்தா் நினைவு சதுக்கத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்களும், இந்துகளும் இணைந்து வழிபட்டனா்.