இளைஞா் கொலை வழக்கில் 9 பேருக்கு சிறைத் தண்டனை

தென்காசி மாவட்டம், கடையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 9 பேருக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், கடையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 9 பேருக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கடையம் அருகே மந்தியூா் பகுதியைச் சோ்ந்தவா் பஞ்சு என்ற சந்திரசேகா் (25). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவருக்கும் இடையே கோயில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டதாம். இந்த முன்பகை காரணமாக கடந்த 25.07.2011-இல் மீண்டும் இவா்களுக்குள் மோதல் ஏற்பட்டதில், முருகன் மற்றும் அவரது இரண்டு சகோதரா்கள் உள்பட 9 போ் சோ்ந்து தாக்கியதில் சந்திரசேகா் உயிரிழந்தாா். இதுகுறித்து , கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன், காளிதாஸ், மாரிராஜ், கணபதி, ரமேஷ், செல்லப்பா, சங்கரம்மாள், ராஜ்க்குமாா், தங்கதுரை ஆகிய 9 பேரையும் கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசங்கா், குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், காளிதாஸுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், மற்ற 7 பேருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ராம மூா்த்தி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com