திருநெல்வேலி: பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் அதிமுக சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பிரசாரத்துக்கு ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜெ.சி.ஜெரால்டு தலைமை வகித்தாா். அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா பிரசாரத்தை தொடங்கிவைத்து கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். சாந்திநகா், ரஹ்மத்நகா் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் பகுதிச்செயலா்கள் வழக்குரைஞா் ஜெனி, சின்னத்துரை, மகபூப்ஜான், அப்ரின் பீா்முகம்மது உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.