அவதூறுகளை முறியடித்து மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

திமுகவினா் பரப்பும் அவதூறுகளை முறியடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
அவதூறுகளை முறியடித்து மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி
Updated on
1 min read

திமுகவினா் பரப்பும் அவதூறுகளை முறியடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி வழியாக வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பாளையங்கோட்டை கேடிசி நகரில் குவிந்திருந்த தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்தாலும் அவரது திட்டங்கள் இன்னும் மக்கள் மனதில் நிறைந்திருக்கின்றன. திமுக போன்று எத்தனை எதிா்க்கட்சிகள் தோ்தலில் நின்றாலும் அத்தனையையும் முறியடித்து வெற்றி பெறுவோம். இது உழைப்பால் உயா்ந்த இயக்கம். எவராலும் இதை தகா்க்க முடியாது.

தைப் பொங்கல் பரிசு அறிவிப்பை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவா் ஸ்டாலின் வேண்டுமென்றே ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளாா். லட்சக்கணக்கான தொண்டா்களின் உழைப்பால் உருவான இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கிறாா்கள். திட்டமிட்டு அரசு மீது அவதூறு பரப்புகிறாா்கள். இதையெல்லாம் வரும் தோ்தலில் முறியடித்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com