காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நெல்லையில் தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 17 பேருக்கு கரோனா பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 17 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :12 ஜூன் 2020, 8:24 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 17 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் மாவட்டத்திற்கு வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்வதற்காக திருநெல்வேலியில் 7 கல்லூரிகளில் கரோனா தனிமைப் படுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு அவர்கள் தங்கவைக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்பட்டும் சளி உள்ளிட்ட மாதிரிகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு சேதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள ஒரு நகைக்கடை ஊழியர், பெட்டிக்கடை உரிமையாளர், தனியார் மருத்துவமனை ஊழியர் என திருநெல்வேலி மாநகரில் மட்டும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து  நகைக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் மூடி, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் மாவட்டத்தில் 17 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.