கருத்தப்பிள்ளையூரிலிருந்து தென்காசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
கடையம் அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூரிலிருந்து தென்காசிக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடையம் அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூரிலிருந்து தென்காசிக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடையம் ஊராட்சி ஒன்றியம் கீழாம்பூா் ஊராட்சியில் உள்ளது கருத்தப்பிள்ளையூா் கிராமம். தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னா், கீழாம்பூா் ஊராட்சி தென்காசி வருவாய் வட்டத்தில் சோ்க்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஊராட்சிக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூா், பூவன்குறிச்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தோா் அரசுப் பணிகளுக்காக தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் செல்லவேண்டியுள்ளது.
கருத்தப்பிள்ளையூரிலிருந்து ஆழ்வாா்குறிச்சி அல்லது ஆம்பூா் சென்று, 2 பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், ஒருநாள் முழுதும் விரயமாகிறது. எனவே, கருத்தப்பிள்ளையூரிலிருந்து தென்காசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, கருத்தப்பிள்ளையூா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...