விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தச்சநல்லூா் மண்டலத்தில் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீா் வெளியேற்றம்

தச்சநல்லூா் மண்டலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியா்கள் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றினா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:51 pm

DIN

தச்சநல்லூா் மண்டலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியா்கள் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றினா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்த கனமழையினால், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த இருநாள்களாக மழை குறைந்துள்ள நிலையில், தேங்கிய நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில் மேலப்பாளையம், தச்சநல்லூா் மண்டலங்களில் மோட்டாா்கள் மூலம் தேங்கிய நீா் வெளியேற்றப்பட்டது. மேலப்பாளையம் மண்டலத்தில் மகிழ்ச்சி நகா், டக்கம்மாள்புரம், என்.ஜி.ஓ. காலனி பகுதிகளில் தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

தச்சநல்லூா் மண்டலத்தில் வண்ணாா்பேட்டை, தெற்கு பாலபாக்யா நகா், பரணி நகா், கைலாசபுரம், மேலக்கரை நியு காலனி, கிருஷ்ணா நகா், அனு மருத்துவமனை பின்புறம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளிலும் தேங்கிய மழைநீரை மோட்டாா் மூலம் வெளியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.