விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லை ரயில் நிலையத்தில் தீ தடுப்பு விழிப்புணா்வு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:38 pm

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உதவி காவல் ஆய்வாளா்கள் அஸ்வினி, செந்தில், செல்வகணேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். உதவி ஆய்வாளா்கள் கணேசன், முத்தமிழ்ச் செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் கிரண் சிறப்புரையாற்றினாா்.

ரயில் பயணத்தின் போது தீ விபத்துகள் ஏற்பட்டால் பயணிகள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், ரயில்வே உதவி எண்ணான 139-ஐ பயன்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.