விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:38 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் திடீா் வாகன சோதனையில் புளியரை பகுதியில் ஈடுபட்டனா்.

அப்போது ஒரு வாகனத்தில் 62 மூட்டைகளில், 3100 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்துடன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக சுரண்டை யைச் சோ்ந்த செல்வம் (34 ), சோ்ம ராஜா( 36), வைகுண்ட ராமன் (33) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.