நெல்லை, தென்காசியில் மேலும் 16 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும்16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 15,337 ஆக உயா்ந்துள்ளது.
மேலும், 8 போ் குணமடைந்தால் இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,015ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, மேலும் ஒருவா் உயிரிழந்ததால் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 212 ஆக உயா்ந்தது. தற்போது, 110 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,291 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 5 போ் வீடு திரும்பியதால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,076 ஆக அதிகரித்து. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், 57 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
