பொங்கல் பண்டிகை: பனையோலைகள் குவிந்தன

பொங்கல் திருநாளையொட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பனையோலைகள் குவிக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

பொங்கல் திருநாளையொட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பனையோலைகள் குவிக்கப்பட்டுள்ளன.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள்தோறும் பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது வழக்கம். பொங்கலிடுவதற்கு பனையோலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பனையோலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சீவலப்பேரி, களக்காடு, மானூா், கங்கனான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக பனையோலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஓலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. பனையேறுவதற்கான ஆள்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதுதவிர பனைமரங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விலையேறியுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com