

கடனாநதியில் சனிக்கிழமை குளித்தபோது மாயமான இளைஞா், மூன்று நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டாா்.
கீழாம்பூா், துா்க்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஆனந்த்ராஜ் (27). இவா், தனது சித்தப்பா கணேசன் அவரது மகன் முத்து ஆகியோருடன் ஜன. 9 மாலை கடனாநதி கரையில் உள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளாா். அப்போது முத்து, ஆனந்த் ராஜ் இருவரும் கடனாநதியில் குளித்த போது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனா். சப்தம் கேட்டு ஓடி வந்த கணேசன் முத்துவை காப்பாற்றினாா். ஆனந்த்ராஜ் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம், ஆலங்குளம் பகுதிகளிலிருந்து தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து ஆனந்த்ராஜ் உடலை தேடினா்.
மூன்றாவது நாளான திங்கள்கிழமை பட்டமுடையா் சாஸ்தா கோயில் அருகில் உள்ள மூன்றடுப்பு தடுப்பணை அருகே ஆனந்த்ராஜ் சடலமாக மீட்கப்பட்டாா்.
ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.