நெல்லை மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறையின் ஆணையா் வெளியிட்டுள்ள ஆணையின்படி, திருவள்ளுவா் தினமான இம் மாதம் 15-ஆம் தேதியும், குடியரசு தினமான 26-ஆம் தேதியும், வள்ளலாா் நினைவு தினமான 28-ஆம் தேதியும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் கூடிய உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலும் அந்த மூன்று நாள்களும் சம்பந்தப்பட்ட மதுக்கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com