/

நெல்லை ஆட்சியா் அலுவலகம் முன்விஷம் குடித்த பெண்ணால் பரபரப்பு

திசையன்விளையில் உள்ள தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:20 pm

DIN

திசையன்விளையில் உள்ள தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை சுந்தரவிநாயகா் கோயில் தெரு பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வருகிறாா்கள். இப்போது அந்த இடத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறி வீடுகளை இடிக்க முயன்று வருகிறாா்களாம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் திருநெல்வேலியில் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறாா்கள்.

இந்நிலையில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு அப் பகுதி மக்கள் மனு அளிக்க வந்தனா். அப்போது இசக்கியம்மாள் (53) என்ற பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.