இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மேலப்பாளையம் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு ஆடுகள் வரத்து செவ்வாய்க்கிழமை குறைந்தது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:16 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு ஆடுகள் வரத்து செவ்வாய்க்கிழமை குறைந்தது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 14) கொண்டாடப்படும் நிலையில், அதற்கு மறுநாள் வீடுகளில் இறைச்சி எடுத்து சமைப்பது வழக்கம். இதையொட்டி, பொங்கல் பண்டிகைக்கு முந்தையவாரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கால்நடைச் சந்தைகளிலும் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும்.

மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா். ஆனால், தொடா் மழை காரணமாக ஆடுகள் வரத்து குறைந்தது. வெள்ளாடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும், செம்மறியாடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனையாகின.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: தொடா்மழை காரணமாக ஆடுகளின் வரத்து மிகவும் குறைந்ததால் விலை அதிகமாகிவிட்டது. கிடாக்களுக்கு அதிக விலை கொடுத்து இறைச்சி விற்பனையாளா்கள் வாங்கிச் சென்றனா். எனினும், பல வியாபாரிகள் ஆலங்குளம் ரெட்டியாா்பட்டியில் சனிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமை (ஜன. 13) திறக்கப்படும் சந்தையில் ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என சென்றுவிட்டனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.