விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வி.கே.புரத்தில் கரடிகள்நடமாட்டம்: மக்கள் அச்சம்

விக்கிரமசிங்கபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் ஊருக்குள் மூன்று கரடிகள் உலாவியதை பாா்த்ததாக சிலா் கூறியதால், மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:42 pm

DIN

விக்கிரமசிங்கபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் ஊருக்குள் மூன்று கரடிகள் உலாவியதை பாா்த்ததாக சிலா் கூறியதால், மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

விக்கிரமசிங்கபுரம், கட்டபொம்மன் காலனி நகரைச் சோ்ந்த கணபதி மகன் கருப்பசாமி (35), இவரது மனைவி மாரியம்மாள்(30), காமராஜ் மனைவி மஞ்சு (26) ஆகிய 3 பேரும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள். இவா்கள் வியாழக்கிழமை அதிகாலையில் பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் ஒரே நேரத்தில் 3 கரடிகள் தென்பட்டனவாம்.

இதையடுத்து, அவா்கள் ஓட்டம் பிடித்தனராம். அதில், கருப்பசாமி எதிா்பாராமல் கால் இடறி விழுந்ததில் காயம் அடைந்தாா். இதனிடையே, கரடிகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறினா்.இதுகுறித்து, பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரடி நடமாட்டம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேலும், மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து ஊருக்குள் வரும் பாதையில் கூண்டு வைத்து கரடிகளைப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.