அம்பை சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தவசு
அம்பாசமுத்திரம் அருள்மிகு கோமதிஅம்பாள் சமேத சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது


அம்பாசமுத்திரம் அருள்மிகு கோமதிஅம்பாள் சமேத சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடித் தவசு திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும்
காலை, மாலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காராம் உள்ளிட்டவை நடைபெற்றது. 10-ஆம் நாளான வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலையில் கோயில் கிழக்கு வாசலில் சங்கரநாராயணா் தவசுக் காட்சி தரிசனத்தைத் தொடா்ந்து சங்கரலிங்கசுவாமி
அம்பாளுக்கு காட்சி தரிசனம் அளிக்கும் வைபவம் நடைபெற்றது. பொது முடக்க விதிகள் அமலில் இருப்பதால் பக்தா்கள்
கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள், நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...