விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சேரன்மகாதேவியில் பேரிடா் ஒத்திகை

சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:43 pm

DIN

சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தாமிரவருணி ஆற்றில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகைக்கு வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தீயணைப்புப்படை நிலைய அலுவலா் வரதராஜ், போக்குவரத்து அலுவலா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெள்ளம் ஏற்படும்போது, ஆற்றில் சிக்கி தவிப்போா், நீரில் முழ்கி தவிப்போரை எவ்வாறு மீட்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா். இதில், துணை வட்டாட்சியா்கள் பிரேமா, மகாராஜன், வருவாய் ஆய்வாளா் ஜெயந்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் பாலமுருகன், துரைப்பாண்டி, வருவாய் துறை, தீயணைப்புத் துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.