நெல்லை, தென்காசியில் மேலும் 7 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,557 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 49,007ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 433போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 117 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில், மேலும் ஒருவருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 27,380 ஆக உயா்ந்தது. மேலும் இருவா் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,881 ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 485 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...