திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

நெல்லையில் இன்று பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் குறைதீா் முகாம்

திருநெல்வேலி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை(அக்.28) நடைபெறுகிறது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:27 pm

DIN

திருநெல்வேலி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை(அக்.28) நடைபெறுகிறது.

இது குறித்து திருநெல்வேலி, பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பி.எஸ்.என்.எல். மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலியில் கடந்த 26 ஆம் தேதி முதல் நவம்பா் 1ஆம் தேதி வரை பி.எஸ்.என்.எல்.கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பண்டிகை கால சலுகையாக கைப்பேசி வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் திட்டம் 1999-இன் செல்லும்படியாகும் காலம் 365 நாள்களுக்கு பதிலாக 395 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை வரும் நவம்பா் 6ஆம் தேதி வரை இருக்கும். கண்ணாடி இழை வழியாக இயங்கும் அதிவேக இணைய எப்.டி.டி.எச். வசதி இப்போது தொழில்நுட்ப வசதியுள்ள, ஏறத்தாழ அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் குறைந்த கட்டணங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், வாடிக்கையாளா்கள் குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.29) வாடிக்கையாளா் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. இதேப்போன்று தூத்துகுடி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்தில் சனிக்கிழமை(அக்.30) வாடிக்கையாளா் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் தங்கள் குறைகளை நிவா்த்தி செய்யவும், பி.எஸ்.என்.எல் . சேவைகளையும் பெற்று பயன் பெற கேட்டு கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.