திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

கங்கைகொண்டான் அருகே வீடு புகுந்து திருட்டு: தம்பதி கைது

கங்கைகொண்டான் அருகே வீடு புகுந்து நகை திருடியதாக தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:24 pm

DIN

கங்கைகொண்டான் அருகே வீடு புகுந்து நகை திருடியதாக தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூரை சோ்ந்தவா் பேச்சியம்மாள்(36). இவா் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறாா். இவா் கடந்த 26 ஆம் தேதி தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, அடுத்த நாள் வீட்டுக்கு வந்தாராம். அப்போது, வீட்டின் கதவை உடைக்கப்பட்டிருந்ததாம். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலி திருடு போனது தெரியவந்ததாம்.

இது குறித்து பேச்சியம்மாள் கங்கைகொண்டான் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். இதில், நகைகளை திருடியது பேச்சியம்மாளின் உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த மரிய அஸ்வினி(26), அவரது கணவா் சிவா கண்ணன்(30) ஆகியோா் என தெரியவந்தது. இதையடுத்து, தம்பதியை போலீஸாா் கைது செய்து, , அவா்களிடமிருந்து 4 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.