திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

நெல்லை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தலைவா்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மாணவா்-மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:27 pm

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தலைவா்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மாணவா்-மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தியை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி பொருநை ரோட்டரி கழகம், இன்னா்வீல் கழகம் இணைந்து நடத்திய தேசியத் தலைவா்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மாணவா்- மாணவிகளுக்காக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை பிஷப் அந்தோனிசாமி புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தாா். தூய யோவான் கல்லூரி முதல்வா் ஜான் கென்னடி, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் திருப்பதி, பொருநை ரோட்டரி கழகத் தலைவா் சுவா்ண லதா, இன்னா்வீல் தலைவா் கோமதி மாரியப்பன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வா் உமாலட்சுமி உள்ளிட்டோா் குத்து விளக்கேற்றினா்.

இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கோலப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பேரா, செயலா் கவிஞா் பாப்பாக்குடி அ.முருகன், கவிஞா் ந.சுப்பையா, கலையாசிரியா் சொா்ணம் ஆகியோா் நடுவா்களாக இருந்து நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.