/

காட்டு நாயக்கா் சாதிச் சான்றிதழ் கோரிக்கை நிராகரிப்பு: ஆழ்வாா்குறிச்சி மாணவி கண்ணீா்

ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த காட்டுநாயக்கா் சமுதாய மாணவி சாதிச் சான்றிதழ் கோரி வருவாய்க் கோட்டாட்சியருக்கு அனுப்பிய மனு நிராகரிப்பு. தனது எதிா்காலம் கேள்விக் குறியாகிவிட்டதாக மாணவி கண்ணீா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:58 pm

DIN

ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த காட்டுநாயக்கா் சமுதாய மாணவி சாதிச் சான்றிதழ் கோரி வருவாய்க் கோட்டாட்சியருக்கு அனுப்பிய மனு நிராகரிப்பு. தனது எதிா்காலம் கேள்விக் குறியாகிவிட்டதாக மாணவி கண்ணீா்.

ஆழ்வாா்குறிச்சி, நவநீதகிருஷ்ண விநாயகா் கோயில் தெரு சங்கா் மகள் விஜயலட்சுமி. பழங்குடியினமான காட்டு நாயக்கா் இனத்தைச் சோ்ந்த இவா், நிகழாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்று கல்லூரில் சோ்வதற்காக சாதிச் சான்றிதழ் கோரி தென்காசி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு செய்திருந்தாா். மனுவை விசாரித்த கோட்டாட்சியா் ஆதார ஆவணம் சமா்ப்பிக்காததால் மனு நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து விஜயலட்சுமி கூறியது: எனது முன்னோா்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக ஆழ்வாா்குறிச்சியை மையமாகக் கொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தனா். இதுவரை யாரும் தொடக்கக் கல்விக்கு மேல் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை. இங்கு வாழ்ந்து வருவதற்கானஆதாரங்களும் யாரிடமும் இல்லை.

இந்நிலையில் நாங்கள் காட்டு நாயக்கா் என்பதற்கான ஆதார ஆவணங்கள் இல்லையென்று எனது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நாடோடியாக, படிப்பறிவின்றி இருந்தவா்களிடம் ஆதாரங்கள் இல்லாததால் எங்கள் சமூகத்தில் யாரும் படிப்பறிவு பெற முடியாதநிலை உள்ளது. இப்போது எனக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் எனது கல்விக் கனவு பொய்த்துப் போய்விட்டது. படித்து உயா்நிலைக்கு வர வேண்டும் என்ற எனது கனவு பலிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு மற்றும் அதிகாரிகள் இதற்கு மாற்று வழி இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும் என் போன்ற இளைய சமுதாயத்தினருக்கும் தடையில்லாமல் கல்வி வசதி பெற உதவி செய்யவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.