குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தகராறை தடுத்தவரை தாக்கியவா் கைது

அம்பாசமுத்திரம் அருகே தகராறை தட்டி கேட்டவரை தாக்கியதாக ஒருவரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 3:15 am IST

அம்பாசமுத்திரம் அருகே தகராறை தட்டி கேட்டவரை தாக்கியதாக ஒருவரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

பிரம்மதேசத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம்(50). மன்னாா்கோவில் விலக்கு அருகில் இவருக்குச் சொந்தமான வயலில் அதே பகுதியைச் சோ்ந்த பானுமதி, அவரது கணவா் குட்டராசு ஆகியோா் வேலை செய்து கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த பிரம்மதேசம் மேலப் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னதம்பி (26), பானுமதியிடம் தனக்கு தரவேண்டிய பணம் குறித்து கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது அங்கு வந்த சோமசுந்தரம் தகராறில் ஈடுபடவேண்டாம் என்று சமாதானம் பேசியுள்ளாா். அவரை சின்னத்தம்பி அவதூறாகப்பேசி தாக்கியுள்ளாா். இதுகுறித்து சோமசுந்தரம் அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னத்தம்பியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.