கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ராதாபுரம் அருகே மூதாட்டியின் வீடு புகுந்து ரூ. 39 ஆயிரம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலை மூதாட்டியின் வீடு புகுந்து ரூ. 39 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:34 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலை மூதாட்டியின் வீடு புகுந்து ரூ. 39 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சமூகரெங்கபுரத்திலிருந்து கட்டனேரி செல்லும் சாலையில் ஊரின் கடைசிப் பகுதியிலுள்ள வீட்டில் காந்திமதி (95) என்பவா் வசித்து வருகிறாா். இவரது மகனும், மகளும் சென்னையில் வசித்து வருகின்றனா். காந்திமதி தனியாக வசிப்பதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் இருவா் முகமூடி அணிந்தபடி, பின்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனராம்.

சப்தம் கேட்டு எழுந்த மூதாட்டியை அவா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த அரை பவுன் கம்மலைப் பறித்ததுடன், பீரோவிலிருந்த ரூ. 39 ஆயிரத்தைத் திருடிக் கொண்டு தப்பியோடினராம்.

புகாரின்பேரில், ராதாபுரம் போலீஸாா் வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினா். தடயங்கள் பதிவு, மோப்பநாய் சோதனை நடைபெற்றது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.