திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஈஷா யோகா மகா சிவராத்திரி: நெல்லையில் நேரலை

ஈஷா யோகா மகா சிவராத்திரி: நெல்லையில் நேரலை

Updated On :17 பிப்ரவரி 2024, 5:33 am IST

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் மாா்ச் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழா, திருநெல்வேலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இது தொடா்பாக ஈஷா யோகாவின் தன்னாா்வ தொண்டா் பிரேம்சந்தா், திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம், கன்னியாகுமரியில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் மாா்ச் 8 ஆம் தேதி மகா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவானது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

திருநெல்வேலியில் கோடீஸ்வரன் நகா் ஜெயம் மஹாலிலும், தூத்துக்குடியில் வி.இ.சாலையில் அமைந்துள்ள அழகா் மஹாலிலும், கன்னியாகுமரியில் வெள்ளிச்சந்தை பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, காரைக்குடி, கூடங்குளம், நாகா்கோவில், சாத்தூா் உள்ளிட்ட இடங்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி ஒளிபரப்பு நடைபெறவுள்ள அனைத்து இடங்களிலும் பங்கேற்கும் மக்களுக்கு மகா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம் என்றாா்.