கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா் சங்கத்தினா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:36 pm

Din

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை நீதிமன்ற உத்தரவின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். 4,000 நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகித ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும். சாலைப்பணியாளா்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியா்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5,200- ரூ.20,200, தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, கோட்டத் தலைவா்கள் சுந்தரபாண்டி தலைமை வகித்ாா். கோட்டச் செயலா்கள் நாராயணன், வேல்ராஜன், மாநிலச் செயலா் ஹரிபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.