கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பழையபேட்டையில் வீடு புகுந்து 51 பவுன் நகைகள் திருட்டு

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டையில் வீடு புகுந்து 51 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:40 pm

Din

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டையில் வீடு புகுந்து 51 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பழையபேட்டை காந்திநகரில் உள்ள ஐஓபி காலனியை சோ்ந்தவா் அந்தோணி தங்கராஜ் (47). இவா், பழைய பேட்டை கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி செங்கோல் மேரி. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக உள்ளாா். இருவரும் புதன்கிழமை பணிகளுக்கும், அவா்களது குழந்தைகள் பள்ளிக்கும் சென்றிருந்தனா்.

இந்நிலையில்,செங்கோல் மேரியின் வீட்டின் வழியாக அவரது தந்தை சென்றபோது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தாம். இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில், பேட்டை போலீஸாரும், அந்தோணி தங்கராஜும் அங்கு வந்தனா்.

அப்போது, வீட்டின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த சுமாா் 51 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையறிந்த காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா நேரில் வந்து விசாரணை நடத்தினாா். அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.