கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

10ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கு இன்றுமுதல் மதிப்பெண் சான்று

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017-2020ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள் வியாழக்கிழமை (நவ.14) முதல் 90 நாள்களுக்குள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:32 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017-2020ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள் வியாழக்கிழமை (நவ.14) முதல் 90 நாள்களுக்குள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் (பொறுப்பு) சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2017 மாா்ச் முதல் 2020 ஜூன், ஜூலை வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தோ்வா்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வியாழக்கிழமை (நவ. 14) முதல் 90 நாள்களுக்குள் தோ்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் திருநெல்வேலி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

தவறும்பட்சத்தில் மதிப்பெண் சான்றிழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.