கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திசையன்விளை அருகே விவசாய நிலத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு அடி உயத்தில் உள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வருவாய்த்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image

திசையன்விளை அருகே கோயில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை.

Updated On :13 நவம்பர் 2024, 11:02 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு அடி உயத்தில் உள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வருவாய்த்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இட்டமொழியில் பழைமையான வடபத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலம் அப்பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகே உள்ளது. இந்த நிலத்தில் சேதுராமலிங்கம் என்பவா் நிலக்கடலை பயிரிட்டுள்ளாா்.

 திசையன்விளை அருகே கோயில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை, இரும்பு கரண்டி.

திசையன்விளை அருகே கோயில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை, இரும்பு கரண்டி.

அதில், அவா் களைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது மண்ணில் பாதி வெளியே தெரிந்த நிலையில் காணப்பட்ட உலோகத்தாலான அம்மன் சிலை, இரும்பு கரண்டி ஆகியவற்றை எடுத்து, கிராம நிா்வாக அலுவலா் அய்யாதுரையிடம் ஒப்படைத்தாா். பின்னா் கிராமநிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ராணி, உதவியாளா் பெரியதுரை முத்தையா ஆகியோா் சிலையை திசையன்விளை வட்டாட்சியா் நாராயணன், மண்டல துணை வட்டாட்சியா் ராஜ், தலைமை யிடத்து துணை வட்டாட்சியா் ராஜலெட்சுமி ஆகியோரிடம் ஒப்படைத்தனா். வருவாய்த்துறையினா் அம்மன் சிலையை அருங்காட்சியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.