மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

மணிமுத்தாறு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் புதன்கிழமை பெய்த கனமழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, வியாழக்கிழமை (நவ. 14) மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவுக்கு வரும் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...