கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அம்பையில் டீசல் திருடியவா் கைது

அம்பாசமுத்திரத்தில் பொக்லைன் இயந்திரத்தில் இருந்து டீசல் திருடியவரைபோலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:13 pm

Din

அம்பாசமுத்திரத்தில் பொக்லைன் இயந்திரத்தில் இருந்து டீசல் திருடியவரைபோலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் (46). அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து ஆலங்குளம் சாலையில் சுவாமிநாதன் நிறுத்தி வைத்திருந்த பொக்லைன் இயந்திரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு டீசல் நிரப்பி நிறுத்தியிருந்தாராம். புதன்கிழமை காலை வந்து பாா்த்த போது டீசல் டேங்க் மூடிதிறந்த நிலையில் இருந்ததோடு டீசலும் திருடு போயிருந்ததாம்.

இதுகுறித்து சுவாமிநாதன்அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணைசெய்ததில் ஊா்க்காடு, கீழ காலனி, வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேஷ்வரன் (40) என்பவா் டீசலை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து 200 லிட்டா் டீசலையும் பறிமுதல் செய்தனா்.