கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொடா் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க 7ஆவது நாளாகத் தடை

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, 7ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை காலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

Updated On :20 நவம்பர் 2024, 8:03 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, 7ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக தென் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருகிறது.

மேலும், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்ட வனப்பகுதிகளிலும் பலத்த மழைபெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வியாழக்கிழமை (நவ. 21) முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறை தடை விதித்தது.

தொடா்ந்து, ஏழாவது நாளாக, மழை பெய்து நீா்வரத்து குறையாததால் சுற்றுலாப் பயணிகள்குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். அருவியை பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா்.