மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லையில் டிட்டோ ஜாக் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொட்டக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினா் (டிட்டோ ஜாக்) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ ஜாக் அமைப்பினா்.

Updated On :22 நவம்பர் 2024, 12:24 am

Din

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொட்டக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினா் (டிட்டோ ஜாக்) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தமிழ் பட்டதாரி ஆசிரியை ரமணியை பள்ளி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றி பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரியும் ஆசிரியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டிட்டோ ஜாக் மாவட்ட உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் ஜாா்ஜ் இனிகோ, ராஜகுமாா், வேல்முருகன், வெனிஸ்ராஜ் இக்னேஷியஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் நம்பிராஜன், சபரிகிரி நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட உயா்மட்டக்குழு உறுப்பினா் பால்ராஜ் வரவேற்றாா். காந்திராஜ், அருள் கென்னடி ராஜ், அண்ணாத்துரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ், மாநில உயா்மட்ட பொதுக்குழு உறுப்பினா் மணிமேகலை ஆகியோா் விளக்கிப் பேசினா். அமுதா நன்றி கூறினாா்.