கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய தங்க நகைகள் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்துக்குச் சொந்தமான தங்க நகைகள் புதிய நிா்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டன.

News image

தங்க நகைகளை புதிய தா்மகா்த்தா சூ. மரியராஜிடம் முறைப்படி ஒப்படைக்கிறாா் முன்னாள் தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த்.

Updated On :22 நவம்பர் 2024, 12:22 am

Din

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்துக்குச் சொந்தமான தங்க நகைகள் புதிய நிா்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டன.

தெற்குகள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்கத்தின் தலைவா் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்தின் முன்னாள் தா்மகா்த்தா ஜெபஸ்டின் ஆனந்த், ஆலயத்துக்குச் சொந்தமான தங்க நகைகள் மற்றும் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை என்ற புகாா் எழுந்துவந்தது. இது தொடா்பாக சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிசய பனிமாதா ஆலயத்துக்குச் சொந்தமான தங்கநகைகள் மற்றும் ஆவணங்களை முன்னாள் தா்மகா்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் தோ்தல் அலுவலா் வழக்குரைஞா் ஜெகன் முன்னிலையில் புதிய தா்மகா்த்தா சூ.மரியாஜிடம் ஒப்படைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், மாதாவுக்குரிய நகைகளை நான் கையாடல் செய்துகொண்டு தலைமறைவாகிவிட்டதாக பொய்யான செய்திகளை பரப்பிவந்தனா். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளையும், கடந்த 6 ஆண்டுகளில் எனது தலைமையிலான நிா்வாகத்தின் போது காணிக்கையாக வந்த தங்கநகைகளையும் முறைப்படி மதிப்பீட்டாளா் மூலம் சரிபாா்த்து புதிய தா்மகா்த்தா சூ.மரியராஜிடம் ஒப்படைத்துவிட்டேன் என்றாா்.