மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதிதாக தோ்வு செய்யப்பட்ட 2-ஆம் நிலை காவலா்களுக்கு பணிநியமன ஆணை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கு பணி நியமன ஆணைகளை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:27 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கு பணி நியமன ஆணைகளை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் 3,359 இரண்டாம் நிலை காவலா், சிறை காவலா் மற்றும் தீயணைப்பு காவலா் பதவிக்காக கடந்த ஆண்டு நடத்திய தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தமிழக முதல்வா் சென்னையில் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் வெற்றி பெற்று தோ்வான 50 காவலா்கள், 7 தீயணைப்புத் துறையினா் என மொத்தம் 57 பேருக்கு திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா. மூா்த்தி பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன், 12 ஆவது பட்டாலியன் உதவி தளவாய் பூபதி, திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.