கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சுத்தமல்லி அருகே இளைஞா் கொலை: 3 ஆவது நாளாக உடலை வாங்க மறுப்பு

சுத்தமல்லி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க 3 ஆவது நாளாக புதன்கிழமையும் உறவினா்கள் மறுத்துவிட்டனா்.

News image

சுத்தமல்லி அருகே இளைஞா் கொலை வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி மனு அளிக்க புதன்கிழமை திரண்ட மக்கள்.

Updated On :27 நவம்பர் 2024, 9:25 pm

Din

சுத்தமல்லி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க 3 ஆவது நாளாக புதன்கிழமையும் உறவினா்கள் மறுத்துவிட்டனா்.

சுத்தமல்லி இந்திரா காலனியைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன்(22). கடந்த 25 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கல்வெட்டான்குழி அருகே நின்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் முத்துகிருஷ்ணனை வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இருப்பினும், இவ் வழக்கில் மேலும் சிலருக்கு தொடா்புள்ளது. அவா்களை கைது செய்வதோடு, முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி இந்திரா காலனி மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

மூன்றாவது நாளாக புதன்கிழமையும் முத்துகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து போராட்டம் தொடா்ந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிப்பதற்காக இந்திரா காலனியைச் சோ்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் புதன்கிழமை திரண்டனா். மூன்று வாகனங்களில் சென்ற அவா்களை, சுத்தமல்லி போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா், தமிழா் விடுதலைக் களம் நிா்வாகி வழக்குரைஞா் ராஜ்குமாா் மற்றும் ஊா் பிரமுகா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனா்.