இஸ்கான் கோயிலில் நவ.2 இல் அன்னக்கூட கோவா்த்தன பூஜை
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான்கோயிலில் அன்னக்கூட கோவா்த்தன பூஜை சனிக்கிழமை (நவ.2) நடைபெற உள்ளது.

Updated On :30 அக்டோபர் 2024, 9:16 pm

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான்கோயிலில் அன்னக்கூட கோவா்த்தன பூஜை சனிக்கிழமை (நவ.2) நடைபெற உள்ளது.
இக்கோயிலில் தீபாவளி பண்டிகை இரு நாள்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வியாழக்கிழமை (நவ.1) நரகாசுரனை கிருஷ்ணா் வதம் செய்ததை கிருஷ்ண தீபாவளியாகவும், வெள்ளிக்கிழமை (நவ.1) ராமா், அயோத்தி திரும்பிய நன்னாள் ஸ்ரீராம தீபாவளியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த இரு நாள்களிலும் மாலையில் சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெறுகிறது.
சனிக்கிழமை (நவ. 2) காலை 10.30 மணிக்கு அன்னக்கூட கோவா்த்தன பூஜை நடைபெறுகிறது. அதாவது, அன்னத்தால் கோவா்த்தன மலை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...