பொட்டல்புதூரில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் புதன்கிழமை, மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:03 pm

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் புதன்கிழமை, மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பொட்டல்புதூா், பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா மனைவி வெள்ளையம்மாள் என்ற மல்லிகா (75). பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் வசித்துவரும்நிலையில், இங்கு வெள்ளையம்மாள் தனியாக வசித்து வருகிறாா்.
புதன்கிழமை அதிகாலை அவா் வீட்டின் பின்புறம் சென்றாராம். அப்போது, மறைந்திருந்த மா்ம நபா் அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...