மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

திருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

Updated On :7 செப்டம்பர் 2024, 6:43 pm

திருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

தமிழக அரசு உத்தரவின்பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பேரிடா் மீட்பு ஒத்திகைகள் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டு வருகின்றன. பேட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் திருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

திருநெல்வேலி வட்டாட்சியா் ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் லிங்கத்துரை தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், வெள்ள காலங்களில் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும், தண்ணீரில் தவிப்போரை மீட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

டிவிஎல்07குரு

திருநெல்வேலி குறுக்குத்துறையில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.