குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை
திருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.


திருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
தமிழக அரசு உத்தரவின்பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பேரிடா் மீட்பு ஒத்திகைகள் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டு வருகின்றன. பேட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் திருநெல்வேலி நகரம் குறுக்குத்துறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
திருநெல்வேலி வட்டாட்சியா் ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் லிங்கத்துரை தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், வெள்ள காலங்களில் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும், தண்ணீரில் தவிப்போரை மீட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.
டிவிஎல்07குரு
திருநெல்வேலி குறுக்குத்துறையில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...