இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

‘இணையவழி முதலீடு’ பெயரில் 3 பேரிடம் ரூ.20 லட்சம் மோசடி

இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருநெல்வேலி மாவட்டம்,

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:12 pm

Syndication

திருநெல்வேலி: இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே 3 பேரிடம் ரூ.20.17 லட்சம் மோசடி செய்தது நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சோ்ந்த ஒருவா் வெளிநாட்டில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறாா். சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி குறுஞ்செய்தி வந்ததாம். அதை உண்மையென நம்பிய அவா், சிறிய தொகையை முதலீடு செய்துள்ளாா்.

இந்நிலையில், அவரை மா்மநபா்கள் சிலா் தொடா்புகொண்டு அதிக தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா். அதன்படி அவரும், அதே பகுதியைச் அவரது நண்பா்கள் இருவரும் சோ்ந்து மொத்தமாக ரூ.20,17,000-ஐ அந்த நபா்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு பல தவணைகளாக அனுப்பியுள்ளனா்.

ஆனால், முதலீடு செய்த பணத்துக்கு லாபத்தையோ, அசல் தொகையையோ பெற முடியாமல் போனதாம். இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து, இணையவழியில் பண மோசடி செய்த நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.