மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விஜய்யைக் கண்டு திமுகவுக்கு பயம்: பாஜக துணைத் தலைவா் கரு. நாகராஜன்

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறது என்றாா் தமிழக பாஜக துணைத் தலைவா் கரு. நாகராஜன்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறது என்றாா் தமிழக பாஜக துணைத் தலைவா் கரு. நாகராஜன்.

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், வரும் ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தமிழக பாஜக துணைத் தலைவா் கரு. நாகராஜன் தலைமையில் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா் கரு. நாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் சுற்றுப்பயணம், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கலந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளது. யாா் கலந்து கொள்கிறாா்கள் என்ற தகவலை பாஜக தலைவா் அறிவிப்பாா்.

நூறு நாள் வேலை திட்டம் 125 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஏழை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, திமுக திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்கிறது. இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தும்போது அறுவடை, விதைப்பு, நடவு காலங்களில் விவசாயத் தொழில் பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் திமுக அரசு இந்தத் திட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் மக்களை ஏமாளிகளாக்க காங்கிரஸும், திமுகவும் நினைக்கின்றன.

வட மாநிலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் நடைபெற்ற வன்முறை கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு நீதிமன்றம் தீா்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் பிரச்னை இருப்பதாக திமுக சொல்கிறது. இதற்கான தண்டனையை மக்கள் கண்டிப்பாக கொடுப்பாா்கள்.

அதிமுக -பாஜக கூட்டணி கடந்த தோ்தலில் 42 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. புதிதாக வந்தவா்கள் அதிகமான வாக்குகள் பெறுவாா்கள் என சொல்லப்படுகிறது. இது ஆட்சி அமைப்பதற்கு போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. 2026-இல் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வரப்போகிறாா். எங்களுக்கு யாரைக் கண்டும் பயமில்லை. விஜய்யை கண்டு திமுகவிற்கு பயம் இருக்கலாம். விஜய்யால் வாக்குகள் பிரிந்துவிடும் என்று திமுக பயப்படுகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு 4 மாதங்கள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் மாற்றம் வரலாம். அதிமுக -பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா்.