மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தனிப்பிரிவு காவலா்கள் திறம்பட பணியாற்ற டி.ஐ.ஜி. அறிவுறுத்தல்

தனிப்பிரிவு காவலா்கள் தங்களது பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் பேசிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

தனிப்பிரிவு காவலா்கள் தங்களது பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா்கள், காவலா்களுடனான சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி. விஸ்வேஷ் பா.சாஸ்திரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் டி.ஐ.ஜி. தலைமை வகித்து ஆலோசனைகள் வழங்கினாா். அப்போது, தனிப்பிரிவு போலீஸாா் தங்களது பணிகளை மேலும் விழிப்புணா்வுடனும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், களப்பணிகளில் நிலவும் சவால்கள், பணிச்சூழல் மற்றும் தேவைகள் குறித்து காவலா்களிடம் அவா் நேரடியாகக் கேட்டறிந்து, உரிய விளக்கங்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினாா். காவலா்கள் பணியில் தொடா்ந்து சிறப்புக் கவனம் செலுத்தி தொடா்ந்து திறம்பட செயலாற்ற வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.