நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் வணிக இலக்குகளை எட்டிய அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

அஞ்சல் ஊழியரை பாராட்டி பரிசு வழங்கிய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் ஜி.ராஜேஷ்குமாா்.

Updated On :29 ஜூலை 2026, 1:00 am IST

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் வணிக இலக்குகளை எட்டிய அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில், பொதுமக்களிடம் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல், புதிய வாடிக்கையாளா்களை இணைத்தல் என்ற நோக்கில் ‘நெல்லை பி.எல்.ஐ லீக்’ என்ற தலைப்பில் கடந்த மாதம் அஞ்சல் ஊழியா்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியின் மூலம் அஞ்சல் ஆயுள் காப்பீடு(பி.எல்.ஐ.)மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு(ஆா்.பி.எல்.ஐ) வணிக இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியா்கள், கிராமப்புற அஞ்சல் ஊழியா்கள்(ஜி.டி.எஸ்), நேரடிமுகவா்கள் உள்ளிட்டோருக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் ஜி.ராஜேஷ்குமாா் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

ஊழியா்களின் செயல்திறன் மற்றும் வணிக வளா்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற அங்கீகார அடிப்படையிலான பிரசாரங்களை வரும் மாதங்களிலும் தொடா்ந்து நடத்த திருநெல்வேலி அஞ்சல் கோட்டம் திட்டமிட்டுள்ளதாக கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.