போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் கணபதி (81). இவா் சில மாதங்களுக்கு முன்பு 4 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பின்னா், மேல்நடவடிக்கைக்காக சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் கணபதி கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றம்சாட்டப்பட்ட கணபதிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு தண்டனை பெற்றுத்தந்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு சாகும் வரை ஆயுள்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



