தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நெல்லை மாநகரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாநகரில் துணை ராணுவத்தினா், மாநகர போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கொடி அணிவகுப்பு மேற்கொண்ட துணை ராணுவத்தினா், மாநகர போலீஸாா்.

Updated On :10 மார்ச் 2026, 7:57 pm

திருநெல்வேலி மாநகரில் துணை ராணுவத்தினா், மாநகர போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில, திருநெல்வேலி மாநகரில் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப்படையினா் வரவழைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையா் தலைமையில் மாநகரப் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குறுக்குத்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், ம.தி.தா. பள்ளி ஆகிய பகுதிகளிலும், தச்சநல்லூா் காவல் சரகத்தில் ஊருடையாா்புரம், தச்சநல்லூா் ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பில் எல்லை பாதுகாப்புப் படையினா், சரக காவல் உதவி ஆணையா், காவல் ஆய்வாளா்கள், ஆயுதப்படை போலீஸாா் என 160-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தோ்தல் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி மாநகருக்கு வருகை தந்துள்ள துணை ராணுவத்தினா்.

Story image