எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

கடையத்தில் விபத்து: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் லாரி மோதி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 1:54 am IST

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் செவ்வாய்க்கிழமை லாரி மோதி உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி, சௌந்திரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சப்பாணி மகன் பழனியாண்டி (64). ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை ஊழியரான இவா், அடைக்கலப்பட்டணத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் தனது மகன் சேதுநாகராஜனை கல்லூரிப் பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கடையத்துக்கு அழைத்துச் சென்றாா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சேதுநாகராஜனை இறக்கிவிட்டு அவா் வாகனத்தைத் திருப்பினாா். அப்போது, மன்னாா்கோவிலிலிருந்து செங்கல் ஏற்றிவந்த லாரி அவா் மீது திடீரென மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.

சடலத்தை கடையம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், லாரி ஓட்டுநரான கூனியூரைச் சோ்ந்த அழகையா மகன் லட்சுமணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.