ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி 4 மாதங்களுக்குப் பின் சாவு: தாய் மீது கொலை வழக்கு பதிவு

கோவில்பட்டியில் தாய் தீ வைத்ததில் காயத்துடன் சிகிச்சை பெற்று

News image
Updated On :3 அக்டோபர் 2012, 11:58 am

dinamani

கோவில்பட்டியில் தாய் தீ வைத்ததில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி, 4 மாதங்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதையடுத்து, அவரது தாய் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் கோபால் (45). சமையல் தொழிலாளி. இவரது  மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களது மகள் மாரிச்செல்வி (13) கோவில்பட்டி அருகே அன்னை தெரசாநகரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-06-2012 அன்று விடுதியில் தங்கியிருந்த மாரிச்செல்வி, இரவு வீடு திரும்பினாராம்.  இதையடுத்து மாரிச்செல்விக்கும், அவரது தாய் ராஜேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஜுன் 12-ம் தேதி மாரிச்செல்வி உடல் மீது தாய் ராஜேஸ்வரி  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாராம். இதில் பலத்த காயமடைந்த மாரிச்செல்வி,  கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த மாரிச்செல்வி, மீண்டும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.  இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.