கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவில்பட்டியில் தலைக்கவச விழிப்புணர்வுப் பிரசாரம்

தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உத்தரவின் பேரில், காவல் துறை

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:00 am

DIN

தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உத்தரவின் பேரில், காவல் துறை சார்பில் போலீஸார் கோவில்பட்டி பகுதியில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர். 
கோவில்பட்டி காவல் நிலையம், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மேற்கொண்ட இந்த  விழிப்புணர்வுப் பிரசாரத்தை டி.எஸ்.பி. ஜெபராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  
இந்த பிரசார பேரணி அய்யனேரி, வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல், பிச்சைத்தலைவன்பட்டி, கஸ்தூரிரங்கபுரம், ஜமீன்தேவர்குளம், பிள்ளையார்நத்தம், படர்ந்தபுளி, தோணுகால் வழியாக இனாம்மணியாச்சியில் நிறைவடைந்தது. 
இதில், காவல் துறை உதவி ஆய்வாளர்கள் முத்துவிஜயன், ராமசாமி உள்பட திரளான காவலர்கள் கலந்துகொண்டனர். பேரணியின் போது ஆங்காங்கே பொதுமக்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.